விமான பயணியின் செருப்பில் 13 லட்சம் கரன்சி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபர் தனது செருப்பில் ரூ. 13 லட்சம்மதிப்புள்ள அமெரிக்க, ஐரோப்பிய கரன்சிகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
![]() |
சென்னையிலிருந்து கொழும்பு வழியாக சிங்கப்பூர் செல்லும் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ஒரு வாலிபர் ஏராளமானவெளிநாட்டுப் பணத்தைக் கடத்திச் செல்வதாக சுங்கத் துறை அதிகா>களுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த திப்புசுல்தான் என்ற வாலிபரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அவர் அணிந்திருந்த செருப்பை பார்த்த அதிகாரிகளுக்கு அதன் மீது சந்தேகம் வந்தது. அந்த செருப்புகளை தீவிரமாக ஆராய்ந்ததில்அந்த செருப்புகளுக்குள் அமெரிக்க டாலர், ஐரோப்பிய யூரோ கரன்சிகள் இருந்தன.
அவற்றின் மதிப்பு ரூ. 13 லட்சம் ஆகும். இதைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நபரை விமான நிலையபோலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் திப்பு சுல்தானைக் கைது செய்தனர்.













Click it and Unblock the Notifications