காஞ்சிபுரம் எல்லையில் நக்சல் வேட்டை!
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் நக்சலைட் ஊடுறுவலைத் தடுக்க தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம்சரக புதிய டிஐஜியாக பொறுப்பேற்றுள்ள ஷகீல் அக்தர் கூறியுள்ளார்.
மத்திய அரசுப் பணியில் இருந்து வந்த ஷகீல் அக்தர் சமீபத்தில் தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு காஞ்சிபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டார்.இதை அதிமுக கடுமையாக விமர்சித்தது.
இந்த நிலையில் ஷகீல் அக்தர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,ஆந்திராவிலிருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக தமிழகத்திற்குள் நக்சலைட்டுகள் ஊடுறுவி விடாமல் தடுக்க தீவிரக்கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆரம்பாக்கம், பத்திரவேடு, ஊத்துக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, எல்லையோர நகரங்களான பென்னலூர்பேட்டை, கனகம்மாசத்திரம், திருத்தணி பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என்பதை விழிப்புடன் கண்காணித்து வருகிறோம்.
இந்த மூன்று காவல் நிலையங்களிலும் தலா ஒரு கான்ஸ்டபிள் நியமிக்கப்பட்டு, நக்சல் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்றார்அக்தர்.












Click it and Unblock the Notifications