உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தல்
Subscribe to Oneindia Tamil
டேராடூன்:உத்தரகண்ட் (உத்தராஞ்சல்) மாநிலத்தில் இன்று சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலம் உத்தரகண்ட். 69 சட்டசபைத் தொகுதிகள் கொண்ட இம் மாநிலத்தில் இப்போது என்.டி.திவாரிதலைமயிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது.
தேர்தலில் காங்கிரசுக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 69 தொகுதிகளில் 785 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.சுமார் 60 லட்சம் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
தேர்தலையொட்டி நேபாளம், திபேத் ஆகிய நாடுகளுடான உத்தரகண்ட் எல்லை சீலிடப்பட்டுள்ளது.
வரும் 27ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications