கர்ப்பிணிப் பெண் தற்கொலை
சென்னைமுதல் குழந்தையைப் போலவே இரண்டாவது குழந்தையும் மன நலம் குன்றியதாக பிறந்து விடுமோ என்ற பயத்தில் சென்னை அருகே உள்ளகும்மிடிப்பூண்டியில், கர்ப்பிணிப் பெண் விஷம் அருந்தி பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சரசு (21). இவருக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு ஒரு வயதில் ஆண்குழந்தை ஒன்று உள்ளது. இக்குழந்தை மன வளர்ச்சி இல்லாத குழந்தையாகும்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்தார் சரசு. ஆனால் முதல் குழந்தை போல இதுவும் மன வளர்ச்சியில்லாத குழந்தையாக பிறந்து விட்டார் என்னசெய்வது என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது. இந்தப் பயத்தில் அவர் விஷம் குடித்து விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications