ஆந்திர அரசு மீது ஜெ பாய்வது ஏன்?-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் உள்ள பாதக அம்சங்களை நீக்கக் கோரி, நடுவர் மன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்படவேண்டிய மறு ஆய்வு மனுவில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து சட்ட மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய 3 மாத கால அவகாசம் உள்ளது. அதன் பின்னரே அந்த மனுவை நடுவர் மன்றம்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். அதன்படி மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய இன்னும் இரண்டரை மாத கால அவகாசம் உள்ளது.

தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.அதில் கலந்து கொண்ட அதிமுக பிரதிநிதிகள், இதுதொடர்பாக சட்டம் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை கலந்து ஆலோசித்து அதன் பின்னர் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்யலாம் என யோசனை தெரிவித்தனர்.

எனவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்த பின்னரும் கூட ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறும் ஜெயலலிதா, கர்நாடகத்தமிழர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசை விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் எதையும் பேசி குழப்பம் ஏற்படுத்தாமல்இருப்பது மிகவும் நல்லது.

காவிரிப் பிரச்சினையில், கர்நாடக காங்கிரஸ் கட்சியை விட தமிழக காங்கிரஸ் கட்சி மிகவும் மெத்தனமாக இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்களுக்கு விரோதமான கருத்து எதையும்வைக்கவில்லை.

ஜெயலலிதா இந்தக் கூட்டத்துக்கு வராவிட்டாலும் கூட, அறிக்கைகள் விடுவதற்கு முன்பு, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை கேட்டு, போதியதகவல்களைப் பெற்றுத் தெளிவடைந்து கொண்டு விடுவது மிகவும் நல்லது.

ஜெயலலிதாவுக்கு தனது பெயரில் ஏதாவது ஒரு அறிக்கை ஏடுகளில் வந்தாக வேண்டும். தமிழகத்தில் அவருக்கு எந்தப் பொருளும்கிடைப்பதில்லை. இதனால்தான் திருவெண்ணை நல்லூரில் என்ன நடக்கிறது, திண்டிவனத்தில் என்ன நடக்கிறது என்றெல்லாம் அறிக்கை விடஆரம்பித்து விட்டார்.

ஆந்திராவில் நடந்த போலீஸ் சோதனையைக் கண்டித்து அறிக்கை விடும் ஜெயலலிதா, தனது ஆட்சிக்காலத்தில் ஏடுகளையும், ஏடுகளைநடத்தியவர்களையும், ஏடுகளின் செய்தியாளர்களையும் என்ன பாடுபடுத்தினார், எத்தனை ஏடுகள் மீது வழக்கு தொடுத்தார், எத்தனைபத்திரிக்கையாளர்களை கைது செய்து சிறையிலே அடைத்தார் என்பதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு ஆந்திர அரசு மீது புகார்கூறியிருக்கிறார்.

ஆந்திராவில் ஜெயலலிதா பெயரிலே உள்ள இடம், ஆந்திர அரசுக்குச் சொந்தமானது என்று நோட்டீஸ் வந்ததுதான் இந்த அறிக்கைக்கு முக்கியக்காரணம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+