கள்ளக் காதலி வீட்டில் காதலன் தற்கொலை!
சென்னை:சென்னையில் கள்ளக் காதலியின் வீட்டிலேயே காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அம்பத்தூரைச் சேர்ந்த கோபால் (40). இவருக்கு மனைவி பத்மாவதி, 2 மகன்கள், மகள் உள்ளனர். இவருக்கும் சம்பத் என்பவரின் மனைவி சந்திரா(28) என்பவருக்கும் இடையே 5 வருடங்களுக்கு முன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இத்தனைக்கும் சந்திராவுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். தனது சம்பாத்தியம் முழுவதையும் சந்திராவுக்கே செலவழித்து வந்த கோபால் தனதுமனைவியின் நகைகளை விற்றும் அவருக்கு பணம் தந்துள்ளார். இதனால் கோபால்-பத்மாவதி இடையே மோதல் நடந்து வந்தது.
இந் நிலையில் குடிபோதையில் கள்ளக் காதலி சந்திராவின் வீட்டுக்குச் சென்றார் கோபால். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த கோபால் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை பிடித்துக் கொண்டுவீட்டுக்குள் வந்தார்.
படுக்கை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். பின்னர் அந்தத் தீயில் சந்திராவோடு சேர்ந்து பாய முயன்றார். ஆனால், சந்திரா அலறியபடிதப்பியோடிவிட்டார், கோபால் தீயில் விழுந்துவிட்டார்.
பலத்த தீக் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இப்போது கள்ளத் காதலி சந்திரா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அவரிடம் விசாரித்தால் தான் இந்த சம்பவத்துக்கான முழு விவரமும் வெளியில் வரும்.












Click it and Unblock the Notifications