டெல்லியில் தமுமுக பேரணி-விபி.சிங் பங்கேற்பு
சென்னை:முஸ்லீம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்ச் 7ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதுதொடர்பாக சாச்சார் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்த அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும். முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீட வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வயிலுறுத்தி தமுமுக சார்பில் மார்ச் 7ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கிபேரணி நடத்தப்படும். இந்த பேரணியை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தொடங்கி வைக்கிறார். ராம் லீலாமைதானத்திலிருந்து இந்தப் பேரணி தொடங்கும்.
பேரணியின் முடிவில் சமூக நீதி மாநாடு நடைபெறும். இதில் பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் உள்ளிட்டோர்கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தப் பேரணி மற்றும் மாநாட்டில் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொள்ளவுள்ளனர்என்றார் ஜவாஹிருல்லா.












Click it and Unblock the Notifications