சென்னையில் மகிந்திரா-ரெனால்ட்-நிஸ்ஸான்இணைந்து மாபெரும் கார் தொழிற்சாலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை அருகே ஓரகடத்தில் மகிந்திரா அண்ட் மகிந்திரா, ரெனால்ட், நிஸ்ஸான் ஆகிய முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ரூ.4,000 கோடி முதலீட்டில் கார் தொழிற்சாலையை அமைக்கவுள்ளன.

சிப்காட் தொழிற் பூங்காவில் இந்த கார் தொழிற்சாலை அமையுள்ளது. இந்தியாவிலேயே ஒரே இடத்தில் அமையும் மாபெரும் தொழிற்சாலையாகஇது இருக்கும். இதற்கான ஒப்பந்தத்தில் இன்று இந்த நிறுவனங்கள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்திட்டன.

Mahindra&Mahindra, Renault and Nissan representatives with Chief Minister Karunanidhi and Minister Dayanithi Maran

என்ஜின் தயாரிப்பு, கட்டுமானம், பெயிண்ட் ஷாப் உள்பட கார் தயாரிப்புக்கான அனைத்துப் பிரிவுகளும் இங்கு அமைக்கப்படவுள்ளன.

முதல் கட்டமாக ஆண்டுக்கு 4 லட்சம் வாகனங்கள் இங்கு தயாரிக்கப்படும். 2009ம் ஆண்டு முதல் இங்கு வாகன தயாரிப்பு தொடங்கும்.

இந்த கூட்டு நிறுவனத்தில் மகிந்திரா அண்ட் மகிந்திரா 50 சதவீத முதலீடும்ம், ரெனால்டும், நிஸ்ஸானும் தலா 25 சதவீத முதலீடும் செய்யவுள்ளன.இதன் மூலம் நேரடியாக 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ரெனால்ட் துணை செயல் தலைவர் பேட்ரிக் பெலேட்டா நிஸ்ஸான் துணை செயல் தலைவர் கார்லோஸ் டிராவர்ஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம்பேசுகையில்,

வாகன தயாரிப்பில் மிக முக்கிய கேந்திரமாக சென்னை விளங்குகிறது. சிறந்த மனித ஆற்றல் வளமும், உயர் தர செயல் திறன் மிக்கதொழிலாளர்களும், மிகச் சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதியும் நிலவுவதால் தான் தமிழகத்தை தேர்வு செய்தோம் என்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் ரெனால்ட் கார்கள் மகிந்திரா நிறுவன வர்த்தக பிரிவின் மூலம் விற்கப்படும். அதே நேரத்தில் நிஸ்ஸான், தான் தயாரிக்கும்கார்களை தனது வர்த்தக பிரிவின் மூலமே விற்பனைக்கு விடவுள்ளது. மேலும் நிஸ்ஸான் தனது கார்களை இங்கிருந்து ஏற்றுமதியும்செய்யவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+