ரயில்வே பட்ஜெட் ஏமாத்திருச்சு... ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:ரயில்வே பட்ஜெட்டில் தமிழக திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் தருவதாக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரயில்வே பட்ஜெட் லட்சக்கணக்கான ரயில் பயணிகளுக்கு சிறிது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. ஆனால்,உண்மையில் சாதாரண மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் பங்க்கில் இ-டிக்கெட் முன்பதிவு, போஸ்ட் ஆபீசில் டிக்கெட் முன்பதிவு, டிக்கெட் எடுக்கதானியங்கி இயந்திரங்கள் அறிமுகம் ஆகிய வசதிகள் உயர்தர மக்களுக்கு தான் பயன் அளிக்கும். சாதாரணமக்களுக்கு பயன் இல்லை.

பயணிகள் ரயில்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் சரக்கு ரயில்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதுரயில்வே நிர்வாகம் வர்த்தக நோக்கில் மட்டுமே செயல்படும் அறிகுறியாக தெரிகிறது.

முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இருக்கைகள் மாற்றியமைக்கப்படும் என்ற அறிவிப்பு பழையரயில்களுக்கு இல்லை. புதிய ரயில்களின் தான் இந்த வசதி இருக்கும் என்கின்றனர்.

இரண்டாம் வகுப்பு கட்டணம், முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு கட்டணம் குறைக்கப்பட்டிருக்கவேண்டும். "ஏழைகள் ரதம் ரயில் ஏழைகள் போக முடியாத ரயிலாக உள்ளது.

ரயில்பாதைகள் மின் மயமாக்கல், இரட்டை ரயில் பாதை, புதிய அகல ரயில் பாதைகள் அமைப்பதற்காக தமிழகமக்களின் நீண்ட கால கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களுக்கு தனி சரக்கு ரயில் பாதை அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

மொத்தத்தில் ரயில்வே பட்ஜெட்டே ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+