கேரளா: அவினாசி-அன்னூரில் நாளை பந்த்
கோவை:சேலம் ரயில் கோட்டம் அமைப்பதற்கு கேரளா தெரிவித்து வரும் எதிர்ப்பைக் கண்டித்து கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையத்தைத் தொடர்ந்து நாளை அவினாசிமற்றும் அன்னூரிலும் பந்த் நடத்தப்படுகிறது.
சேலம் ரயில் கோட்டத்தை எதிர்த்து அடாவடியாக நடந்து வரும் கேரளாவைக் கண்டித்து சமீபத்தில் கோவை, திருப்பூர், பல்லடம், மேட்டுப்பாளையம் ஆகியஊர்களில் முழு அடைப்பு மிகவும் வெற்றிகரமாக நடந்ததது.
இந் நிலையில் அவினாசி மற்றும் அன்னூரிலும் பந்த் நடக்கிறது. இந்த ஊர்களில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பந்த்தை முழுமையாக, வெற்றிகரமாக நடத்தமுடிவெடுக்கப்பட்டது.
நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. கடைகள், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள்உள்ளிட்டவை மூடப்படும். பேருந்துகளும் ஓடாது. ஆட்டோக்கள், வேன்கள் உள்ளிட்டவையும் இயங்காது.
இப்பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்கள், விசைத்தறி நிறுவனங்களும் மூடப்படவுள்ளன.
பந்த்தையொட்டி இந்த ஊர்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications