ராமகோபாலனின் ராம ராஜ்ய யாத்திரை
சென்னை:ராம ராஜ்யத்தை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் வரும் 3ம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து யாத்திரை நடக்கவுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சுதந்திரப் போராட்ட காலத்தில் ராமராஜ்யம் தான் நமது லட்சியம் என்று காந்தி வலியுறுத்தினார். ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு அந்த லட்சியம்மறக்கப்பட்டு விட்டது. அந்த லட்சியத்தை மக்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்த ராமராஜ்ய பிரார்த்தனை இயக்கமும், இந்து முன்னணியும்இணைந்து யாத்திரை நடத்தவுள்ளோம்.
மார்ச் 3ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கி மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கரூர், பழனி, பொள்ளாச்சி, கோவை,நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, வேலூர், காஞ்சிபுரம், சென்னை, திருச்சி
நிறைவு தினத்தன்று சண்டி ஹோமம் நடத்தப்படும்.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெரிய ஊர்களுக்கு யாத்திரை செல்லும். அங்கு பொது இடத்தில் ராமாயண கண்காட்சி, ராமநாமஜப யோகம், கூட்டு பிரார்த்தனை, பஜனைப் பாடல்கள், ராமபிரானின் படத்திற்கு மலர் வழிபாடு ஆகியவை நடக்கவுள்ளது.
சமுதாயத்தில் உள்ள பிரச்னைகளை எதிர்கொள்ள நல்லவர்கள் முன்வர வேண்டும் என்பதற்காக இந்த யாத்திரையின் நோக்கமாகும் என்றுகூறியுள்ளார் ராமகோபாலன்.












Click it and Unblock the Notifications