போலி பிஷப் ஆனந்தராஜுக்கு குண்டாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:வீடு கட்டித் தருவதாக கூறி காண்டிராக்டர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ள போலி பிஷப் ஆனந்தராஜ்தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் என்று கூறி தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தநூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடமிருந்து பல கோடி பணத்தைச் சுருட்டியதாக ஆனந்தராஜ் மீது புகார் எழுந்தது.

ஆனாலும் அவர் போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரும்போதுஅவரை போலீஸார் கைது செய்தனர். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஆனந்தராஜ்.

அவர் மீது நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஆனந்தராஜை தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பான உத்தரவை போலீஸார் புழல் சிறைக்குச் சென்று ஆனந்தராஜிடம் கொடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+