துபாய்: சிறுவர்கள் கடத்தல்-இந்திய தம்பதி கைது
துபாய்:சிறுவர்களைக் கடத்தியதாக இந்தியாவைச் சேர்ந்த கணவன், மனைவி மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
சிறுவர்கள் கடத்தலைத் தடுக்க துபாயில் புதிதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ்தொடரப்பட்டுள்ள முதல் வழக்கு இதுதான்.
சிறுவர்களைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்தியத் தம்பதியின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.கணவரின் பெயர் ஏ.கே. என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 54 வயதாகிறது. அவரதுமனைவிக்கு வயது 50.
இருவரும் 12 மற்றும் 13 வயது கொண்ட இரு இந்தியச் சிறுவர்களை போலி பாஸ்போர்ட்டுகள் மூலம்துபாய்க்குக் கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாரீஸ் செல்ல முயன்றபோது துபாய் விமான நிலையத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
விசாரணையின்போது இந்தியாவிலிருந்து இரு சிறுவர்களையும் 70 ஆயிரம் திர்ஹாமுக்கு இவர்களைவிலைக்கு வாங்கியதாகவும், பாரீஸுக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனையும், 10 லட்சம் திர்ஹாம் அபராதமும்விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications