காலிலும் விழுவார், கழுத்தையும் அறுப்பார்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:வைகோ காலிலும் விழத் தயங்க மாட்டார். ஆனால் காலை வாரி விடவும் செய்வார், கழுத்தையும் அறுக்கத் தயங்க மாட்டார் என்று எல்.கணேசன்காட்டமாக கூறியுள்ளார்.

விழுப்புரம், கடலூர் மாவட்ட போட்டி மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. கூட்டத்தில் செஞ்சி ராமச்சந்திரன் பேசுகையில்,எந்தக் கொள்கைக்காக மதிமுக உருவாக்கப்பட்டதோ அதை தனது சுயநலத்திற்காக குழிதோண்டிப் புதைத்து விட்டார் வைகோ.

வைகோ, கொள்கையில் தெளிவில்லாதவர், விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக கூறிக் கொண்டு வேஷம் போடுகிறார். அரசியல் நேர்மை,லட்சியத்தில் உறுதி என எதுவுமே இல்லாதவர் வைகோ என்றார்.

எல்.கணேசன் பேசுகையில், நம்மைத் தவிர வேறு யாரும் வளர்ந்து விடக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர் வைகோ. வைகோவுடன், மதிமுகதொடங்கியபோது இருந்த யாருமே இப்போது மதிமுகவில் இல்லை.

ஹிட்லரின் கொடுமை தாங்க முடியாமல் யூதர்கள் ஓடியது போல எல்லோரும் ஓடி விட்டனர். இவ்வளவு நடந்தும் கூட, எங்களுக்கு சிறு சிராய்ப்புகூட இல்லை என்று வைகோ கூறுகிறார் என்றால் அவருக்கு வெட்கம் இல்லையா.?

துரோகம் செய்வதற்கு சளைக்காதவர் வைகோ. கருணாநிதிக்கு செய்தார், வாஜ்பாய்க்கு செய்தார், ஏன், ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர்வைகோ. காலிலும் விழுவார், வாரியும் விடுவார், நம்ப வைத்து கழுத்தையும் அறுப்பார். அவர்தான் வைகோ என்றார் எல்.கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+