டாஸ்மாக்கில் இனி குளு குளுன்னு குடிக்கலாம்!!
சென்னை:தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அதி நவீன பார்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் குடிமக்கள்வசதியாக, சொகுசாக, ரவுசாக அமர்ந்து சரக்கு சாப்பிட குஷன் சீட், கண்ணாடி டேபிள் ஆகியவையும் போடப்படுகின்றன.
கடந்த அதிமுக ஆட்சியில் தனியார் மதுக் கடைகள் ஒழிக்கப்பட்டு அனைத்தையும் அரசே எடுத்துக் கொண்டது. தமிழக அரசின் டாஸ்மாக்நிறுவனமே தற்போது மதுக் கடைகளை நடத்தி வருகிறது.
கடைகளுக்கு அருகே பார்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் பார்களில் ஒரு வசதியும் இல்லை. இதனால் ‘குடிமக்கள்‘ மிகுந்த‘சிரமப்பட்டு‘ சந்து பொந்துக்குள் நின்றும், கடை முன் நின்றும் கடக் என ஒரே மூச்சில் குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
![]() |
குடிமக்களின் ‘கண்ணீர் புலம்பல்‘ அரசின் காதுகளை எட்டியதும், உடனடியாக பார்களை மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டது. இந்த பார்களில்பெஞ்சும், சேரும் உண்டு என்றாலும் குடிமக்கள் எதிர்பார்க்கும் இன்ன பிற வசதிகள் இல்லை.
இந் நிலையில் இப்போது பார்களை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பார்கள் படு நவீனமாக மாறப் போகின்றன. பார்கள் முழுவதும் குளிர்சான வசதியுடன் கூடியதாக மாறுகின்றன. வசதியாக அமர்ந்து கொள்ளகுஷன் சோபா இருக்கை, கண்ணாடி பொருத்தப்பட்ட டேபிள், கஸ்டமர்களுக்கு சரக்கு சப்ளை செய்வோர் அணிய கண்கவர் சீருடை,கம்ப்யூட்டரைஸ்டு பில் என அட்டகாசமாக மாறப் போகின்றன அரசு பார்கள்.
ஒவ்வொரு பாரும் ரூ. 3 லட்சம் செலவில் மாற்றப்படுகிறது. இந்த பார்களில் 25 பேர் ஒரே நேரத்தில் உட்கார்ந்து குடிக்கும் வகையில் இருக்கைகள்போடப்பட்டிருக்கும். கை கழுவ (ரொம்பக் குடித்து வாந்தி எடுப்போர், வாயையும் கழுவிக் கொள்ளலாம்!) வாஷ் பேசினும் அமைக்கப்படுகிறது.
ஏ.சி வசதி கொண்ட பாருக்குச் சென்று குடிக்க ஒவ்வொரு குடிமகனும் ரூ. 10 நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டுமாம். மற்றபடி சரக்குக்குகூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
மார்ச் 10ம் தேதிக்குள் இந்த மாற்றங்களை ஏற்படுத்தி விட உத்தரவிடப்பட்டு உள்ளதால், நவீன பார்களை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்துவருகிறது. சில கடைகளில் இந்த மாற்றம் அமலுக்கு வந்துவிட்டது.
தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 300 பார்கள் இப்படி அதி நவீனமாக அமைக்கப்படவுள்ளன. அதைத் தொடர்ந்து பார்களின்எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் நிறுவனத்தின் மண்டல அலுவலகங்கள் உள்ளன. இதுதவிரமாவட்டந்தோறும் மேலாளர் அலுவலகங்களும் உள்ளன. மொத்தம் 41 டிப்போக்கள் உள்ளன.
இந்த டிப்போக்களிலிருந்து மாநிலம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 697 மதுக் கடைகளுக்கு விதம் விதமான மது வகைகள்விநியோகிக்கப்படுகின்றன. நகர்ப்புறங்களில் 3 ஆயிரத்து 264 கடைகளும், புறநகர்ப் பகுதிகளில் 3 ஆயிரத்து 433 கடைகளும் உள்ளன.
மொத்தம் 6 ஆயிரத்து 652 மேற்பார்வையாளர்கள், 17 ஆயிரத்து 326 ஊழியர்கள் இதில் பணியாற்றுகின்றனர்.
நகர்ப்புறங்களில் உள்ள மதுக் கடைகளில் 2 ஆயிரத்து 963 கடைகளிலும், புறநகர்களில் உள்ள 2 ஆயிரத்து 223 கடைகளிலும் அட்டாச்டு பார்கள்உள்ளன.
‘பாரு‘க்குள்ளே நல்ல ‘பாரு‘ நம்ம டாஸ்மாக் ‘பாரு‘!













Click it and Unblock the Notifications