காவிரி தீர்ப்பை எதிர்த்து வீல் சேர் ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
ஹூப்ளி:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநிலம் ஹூப்ளியில், உடல் ஊனமுற்றோர் கலந்து கொண்ட வீல் சேர் ஊர்வலம் நடந்தது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக காவிரி டெல்டா மாவட்டங்களில் (மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர்) தொடர்ந்துபோராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் வட கர்நாடகத்தில் உள்ள ஹூப்ளி நகரில் நேற்று வித்தியாசமான போராட்டம் நடந்தது. ஹூப்ளி-தார்வாட், பெல்காம், குல்பர்கா,ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த உடல் ஊனமுற்றோர் பெரும் திரளாக கூடி தீர்ப்பை எதிர்த்து ஊர்வலம் நடத்தினர்.
அனைவரும் தங்களது வீல் சேர்களில் அமர்ந்தபடி ஊர்வலமாக சென்றனர். இந்திரா கிளாஸ் ஹவுஸ் என்ற இடத்திலிருந்து சென்னம்மா சர்க்கிள்வரை ஊர்வலம் சென்றது.












Click it and Unblock the Notifications