சன் ஷேடு விழுந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ராஜபாளையம்:வீட்டின் நிழல் கூரை (சன் ஷேடு) இடிந்து விழுந்ததில் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 3 வயதுக் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கிப் பலியானார்கள்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரங்கப்பநாயக்கன்பட்டியில் இச் சம்பவம் நடந்தது.
நேற்று இரவு வெட்கை காரணமாக கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் வீட்டுக்கு வெளியே படுத்துத் தூங்கினர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் சன் ஷேடு திடீரென இடிந்து 3 பேரின் மீதும் விழுந்தது. இதில் 3 பேரும் உடல் நசுங்கி சம்பவஇடத்திலேயே பலியாயினர்.












Click it and Unblock the Notifications