முலாயம் ரூ. 500 கோடி சொத்து குவிப்பு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் ரூ. 500 கோடி அளவுக்கு சொத்துகுவித்துள்ளதாகக் கூறப்படும் புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் வெடித்தது. காங்கிரஸ், பாக எம்பிக்கள் முலாயம் ராஜினாமா செய்யவேண்டும் என கோஷமிட்டனர். பதிலுக்கு முலாயமின் சமாஜ்வாடி கட்சி எம்பிக்கள் கோஷமிட்டதால் இருஅவைகளிலும் பெரும் அமளி நிலவியது. இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

சமூக சேவகர் விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில்முலாயமின் சொத்து குவிப்பு குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி லட்சுமணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

முலாயம் சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள், இன்னொரு மகன் பிரதீக்யாதவ் ஆகியோர் மீதான புகார்களைப் பரிசீலித்து, அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யமுடியுமா என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர், அதிலும் நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலத்தின் முதல்வராகஇருப்பவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுஎழுந்திருப்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு முரணானது.

எனவே இந்த விஷயத்தை சிபிஐ விசாரணைக்கு விடும் நிலைமை உருவாகியுள்ளதாக நீதிபதிகள்தெரிவித்துள்ளனர்.

உ.பி. மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முலாயம் மீதான இந்த விசாரணை,சமாஜ்வாடிக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது.

மாஜி முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவர் முலாயம் சிங் என்பது குறிப்பிடதக்கது. முலாயமின்வலது கரமான அமர்சிங் நாட்டின் மிகப் பெரிய அரசியல்-தொழில்துறை புரோக்கர் என்று குற்றம்சாட்டப்படுபவராவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+