ஆண்களை மோசடி செய்த தம்பதிகள் கைது
சென்னை:இரண்டு சக்கர வாகனங்களில் தனியே வரும் ஆண்களை நூதன முறையில் மிரட்டி பணம், நகைகள், கிரடிட் கார்ட் ஆகியவற்றை பறித்த வந்ததம்பதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்த வாசுதேவன் மகேஸ்வரன் (50) நகை ஆசாரியான இவர் 2 நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணாசாலையில்மொபட்டில் வந்துக் கொண்டிருந்தார். அப்போது சிக்னலுக்காக நின்றுக் கொண்டிருந்த போது ஒரு இளம்பெண் லிப்ட் கேட்டார்.
வாசுதேவன் அவரை ஏற்றிக்கொண்டு வந்தபோது திருமலைப்பிள்ளை சாலை வந்ததும் அந்த பெண் இறங்கிக் கொண்டார்.
அப்போது வேகமாக வந்த புல்லட் அவரகளை உரசியபடி நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த ஒரு நபர் வாசுதேவனின் மொபட்டில் இருந்துசாவியை எடுத்துக் கொண்டு, விபசார அழகியுடன் உனக்கென்ன தொடர்பு என பலக் கேள்விகளை கேட்டு நடங்கள் ஸ்டேஷனுக்கு என்றார்.
இதனால் ஆடிப்போன வாசுதேவன் அந்த பெண் யாரென எனக்கு தெரியாது எனக் கூறியும் அந்த நபர் விடவில்லை. போலீஸ் வழக்கு என்றுசென்றால் பெயர் ரிப்பேராகும். விபசார அழகியுடன் உல்லாசமாக இருந்ததாக பேப்பரில் போட்டோவுடன் செய்தி வரும். என்னை கவனியுங்கள்கண்டுக் கொள்ளாமல் விட்டுவிடுகிறேன் என்றார்.
உடனே வாசுதேவனிடமிருந்து 2 மோதிரம், ரூ. 2000 மற்றும் கிரடிட் கார்டு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தனது புல்லட்டில் பறந்துசென்றுவிட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த வாசுதேவன் போலீசில் புகார் கொடுத்தார். அவர் கூறிய அடையாளங்களை வைத்து விசாரித்து பார்த்தில் விபசாரதடுப்பு பிரிவில் அப்படி ஒரு அதிகாரி இல்லையென தெரிய வந்தது.
இதையடுத்து அண்ணா மேம்பால் அருகே துணை கமிஷ்னர் பாஸ்கரன் உதவி கமிஷ்னர் சலேத்ராஜ், இன்ஸ்பெக்டர் காதர்மொய்தீன் ஆகியோரைகொண்ட தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் மாறுவேடத்தில் நின்றுருந்தனர்.
அப்போது வாசுதேவனிடம் லிப்ட் கேட்ட அந்த பெண் நின்றிருந்தார், அவளை மிரட்டி விசாரித்தனர்.
அப்போது அவள் கூறியாதவது,
நான் ராதிகா(27) அந்த நபர் என் கணவர்(27) அவருக்கு வேலை இல்லாததால் இதுப்போல் செய்தோம். அண்ணா மேம்பாலம் அருகே நிற்பேன்,தனியாக மொபட்டில் வரும் ஆண்களிடம் லிப்ட் கேட்பேன். அப்போது என் கணவர் வந்து என்னை விபசார அழகி என்று மிரட்டுவார்.இதுப்போல் பலரை மிரட்டி பணம் பறித்துள்ளோம். குடும்பத்தை நடத்தத்தான் இப்படி மோசடி செய்தோம் எனக் கூறினார்.
இவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதுப்போல மோசடி வேலைகள் நடந்து வருகிறாதா எனவும் விசாரித்துவருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications