மீண்டும் சட்ட மேலவை வராது: கருணாநிதி
சென்னை:தமிழகத்தில் சட்ட மேலவை மீண்டும் அமைக்கப்பட மாட்டாது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
கடந்த 1986ம் ஆண்டு ஒழிக்கப்பட்ட தமிழக சட்ட மேலவை மீண்டும் வரப் போவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும்கூறப்பட்டது.
மேலவையை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்த வேலைகளில் ஏற்கனவே அரசு இறங்கி விட்டதாகவும் அதிகாரிகள் நியமனம், ஊழியர்கள்நியமனம் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், எத்தனை உறுப்பினர்கள் மேலவையில் இருக்க வேண்டும் என்பதுகுறித்தும் ஆய்வு நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதை முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்தில் மீண்டும் சட்ட மேல்சபை வரப் போகிறது என்று செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக 2வாரங்களில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் உண்மை இல்லை. சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் மேலவை ஒழிக்கப்பட்டது. அப்போது 63 உறுப்பினர்கள் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மீண்டும் மேலவைக்கு உயிரூட்டப்படும் எனதெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அந்தத் திட்டமில்லை என முதல்வர் மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications