இந்தோனேஷியா-தரையிறங்கியபோது விமானம்வெடித்து சிதறியது-49 பேர் உடல் கருகி பலி
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா:இந்தோனேஷியாவில் விமானம் தரையிறங்கியபோது ரன் வேயில் இருந்து விலகி ஓடி சுவரில் மோதி நொறுங்கி, வெடித்துச் சிதறியது.விமானத்தில் 140 பேர் இருந்தனர். இதில் 49 பேர் பலியாகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகம்எனத் தெரிகிறது.
யோக்யகார்தா நகர விமான நிலையத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது. இந்தோனஷிய அரசின் கருடா விமான நிறுவனத்தைச் சேர்ந்த அந்தபோயிங் விமானத்தில் 133 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் இருந்தனர்.தரையிறங்கிய அந்த விமானம் ரன் வேயில் இருந்து விலகி ஓடியது. ரன் வேயின் முடிவில் இருந்த சுவரில் மோதி வெடித்துச் சிதறியது. இதில் 48பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் பலியானார்.
16 பேர் வரை காப்பாற்றப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த விமானம் ஜகார்தாவில் இருந்து யோக்யகார்தாவுக்கு வந்து தரையிறங்கியபோது இந்த விபத்து நடந்தது.












Click it and Unblock the Notifications