காதை திருகி..-ஆசிரியை மீது போலீஸில் புகார்
சென்னை:மாணவனின் காதைத் திருகி, கன்னத்தில் பளார் என அடித்ததாக ஆசிரியை மீது போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை வி.எம். தெருவில் வசித்து வருபவர் ஆசாத் அலி. போஸ்ட்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் மாநகரகாவல்துறை ஆணையர் லத்திகா சரணை சந்தித்து புகார் கொடுத்தார்.
அதில், எனது மகன் ஆரிக் இக்பால், மயிலாப்பூர் கேசரி மேல்நிலைப் பள்ளியில் 7வது படித்து வருகிறான். வீட்டுப் பாடத்தை சரியாக செய்யாமல்பள்ளிக்குச் சென்றுள்ளான்.
இதையடுத்து இந்தி ஆசிரியை ரமா கெளரி என்பவர் எனது மகனின் காதை பலமாகத் திருகி, கன்னத்தில் பளார், பளார் என அடித்துள்ளார். அதில்அவனது கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காதிலும் ரத்தம் ஒழுகி துடித்துள்ளான்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சீனிவாச ராவ், ஆசிரியை ரமா கெளரியை அணுகி கேட்டபோது என்னத்ை திட்டி வெளியேற்றிவிட்டார்கள்.
எனது மகனை அடித்த ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார் ஆசாத் அலி. இதுகுறித்து உரியநடவடிக்கை எடுக்குமாறு ராயப்பேட்டை உதவி ஆணையருக்கு லத்திகா சரண் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து சீனிவாச ராவிடம் கேட்டபோது, இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது. அதுகுறித்து எனக்குத் தெரிய வந்தவுடன்,சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் எழுத்துப்பூர்வமான விளக்கம் கேட்டுப் பெற்றோம்.
அந்த ஆசிரியைக்கு மெமோவும் அனுப்பப்பட்டது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். விசாரணைக்கு பெற்றோர்கள்உரிய அவகாசம் கொடுத்து விட்டு அதன் பின்னர் காவல்துறையை நாட வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications