புலிகளுக்கு உதவினால் கடும் நடவடிக்கை-டிஜிபிஆயுதக் கடத்தல்: இதுவரை 41 பேர் கைது
சென்னை:விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபிமுகர்ஜி எச்சரித்துள்ளார். ஆயுதக் கடத்தல் தொடர்பாக இதுவரை 16 இலங்கைத் தமிழர்கள் உள்பட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக டிஜிபி முகர்ஜி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் முகர்ஜி கூறியிருந்ததாவது:
திருச்சியில் 6.3.2007 அன்று அருள் சீலன் என்ற இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்,ராகுலன், பிரதீபன், பகீரதன் ஆகிய இலங்கைத் தமிழர்களும், ஹவாலா முறையில் ரூ. 17 லட்சம் பணம் கொடுத்த சென்னையைச் சேர்ந்த பரக்கத்ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ராகுலன் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூரில் 4,500 கிலோ எடை கொண்ட 150 மூடை இரும்புக் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதுதொடர்பாக ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தமிழக கடலோரப் பகுதிகளைப் பயன்படுத்தி கள்ளக் கடத்தல், ஆயுதக் கடத்தல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 16 இலங்கைத் தமிழர்கள்உள்பட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்முகர்ஜி.












Click it and Unblock the Notifications