அரசியலுக்கு வந்தால் திட்டுவீங்களே .. கனிமொழி
சென்னை:நான் அரசியலுக்கு வந்தால் வாரிசு அரசியல் என்று திட்டு விழும் என்று முதல்வர் கருணாநிதியின் மகளும், கவிஞருமான கனிமொழி ஆதங்கம்தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தையொட்டி சென்னையில் அப்பல்லோ பெண்கள் சிகிச்சை மையத்தின் சார்பில் பெண்களுக்கான சுகாதார கண்காட்சி நேற்றுதொடங்கியது. இதை கனிமொழி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் நீங்கள் எப்போது அரசியலுக்கு வரப் போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குகனிமொழி, ஏன், அரசியலுக்கு வந்த பிறகு வாரிசு அரசியல் என்று திட்டுவதற்கா?
படித்த பெண்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசியலில் துணிச்சலும், தைரியமும் மிக்க பெண்களால்தான் சாதிக்க முடியும். படித்தால்மட்டும் சாதித்து விட முடியாது.
எனவே தைரியம், துணிச்சல் உள்ள பெண்கள் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும். அவர்கள் வந்தால்தான் ஆரோக்கியமான அரசியலைக்கொடுக்க முடியும் என்று ஆதங்கமாக கூறினார் கனிமொழி.












Click it and Unblock the Notifications