விடுதலைப் புலிகளின் ஹவாலா தொடர்புதிமுக தொண்டர் உள்பட 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:திருநெல்வேலி ரயில் நிலையத்தில் .ன்பதிவு விண்ணப்பங்கள் மலையாளத்தில் இருப்பதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.அதிகாரிகளின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்திற்குள் உள்ள சென்னை, மதுரை, திருச்சி ஆகிய ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகியமொழிகளில் அமைந்த ரயில்வே முன்பதிவு விண்ணப்ப பாரம் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால் கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டங்களின் கீழ் வரும் தமிழக ரயில் நிலையங்களில் மலையாளத்திலேயேவிண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடியதால் தமிழில் தற்போது விண்ணப்பங்கள்வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மதுரை கோட்டத்தின் கீழ் வரும் நெல்லை ரயில் நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக மலையாளத்தில் அச்சிடப்பட்ட விண்ணப்பபாரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

முன்பு தனியாரிடம் விண்ணப்ப பாரங்கள் அச்சிடும் பணி ஒப்படைக்கப்பட்டது. இதனால் தெளிவான தமிழ், ஆங்கிலத்தில் அவர்கள் அச்சிட்டுக்கொடுத்தனர். ஆனால் தற்போது, ரயில்வே நிர்வாகமே விண்ணப்ப பாரங்களை அச்சிட்டு வருகிறது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு மதுரையிலிருந்துதான் விண்ணப்ப பாரங்கள் அனுப்பப்படும். அப்படி அனுப்பப்பட்ட பாரங்களில் தற்போதுமலையாளத்தில் இடம் பெற்றது எப்படி என்பது தெரியவில்லை.

கடந்த ஒரு வாரமாக இந்தக் கூத்து நடந்து வந்தபோதிலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அசமஞ்சமாக உள்ளனர். இதனால்முன்பதிவு பாரங்களைப் பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

அதிகாரிகளின் இந்த பொறுப்பற்ற தன்மைக்கு நெல்லை நகர மக்கள் கடும் அதிருப்தியும், எரிச்சலும் வெளியிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+