சென்னை விமான நிலையத்தில் பயங்கர தீவிபத்து
சென்னை:சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ளபொருட்கள் சேதமடைந்தன.
சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.இந்த நிலையில் இன்று அதிகாலை அங்கு பயங்கர தீவிபத்து நடந்தது.
மளமளவெனப் பற்றிக் கொண்ட தீ அலுவலகம் முழுவதும் வியாபித்து கொளுந்து விட்டு எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் கம்ப்யூட்டர்கள், பல்வேறு ஆவணங்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின. ரூ. 50 லட்சம் அளவுக்கு சேதம்ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தீவிபத்தையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். தீவிபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம்எனக் கூறப்படுகிறது. இருப்பினும் சதி வேலையும் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமுஎழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications