நாமக்கல் மருத்துவமனையில் தீ விபத்து:மருந்து பாட்டில்கள் வெடித்து சிதறின

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்:நாமக்கல்லில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மருந்து பாட்டில்கள் வெடித்துச் சிதறின.

நாமக்கல் மோகனூர் சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவனை உள்ளது. 2,000 மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று அதிகாலை 4 மணிக்கு மருந்துப் பொருட்களும் மற்ற மருத்துவ உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென தீவிபத்துஏற்பட்டது. இதில் மருந்து பாட்டில்கள் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறின.

தீ கொளுந்து விட்டு எரிந்து அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. ராசிபுரம், திருசெங்கோடு ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்புவண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. மருத்துவமனை ஊழியர்களும்தீயை அணைக்க உதவினர்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு காலை 7.30 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள்தீவிபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+