கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செல்லாது
சென்னை:தமிழக அரசின் மேல் நிலைப்பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து அரசுபிறப்பித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 1,200 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்பாடப் பிரிவில் 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பகுதி நேர ஊழியர்களாகபணியாற்றி வருகின்றனர்.
கடந்த 1999-2000 ஆண்டில் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த ஆட்சியில்பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த ஆசிரியர்களின் பணியை நிரந்தரமாக்க சிறப்புத் தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்கு பி.எட்கல்வித் தகுதி இல்லாவிட்டாலும், பி.எஸ்.சி பட்டப் படிப்பு அல்லது எம்.எஸ்.சி பட்டமேற்படிப்பு இருந்தால் போதும் என்றும் கடந்த அக்டோபர்4ம்தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த சிறப்பு தேர்வு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பி.எட் கம்ப்யூட்டர் பட்டதாரிஆசிரியர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். எங்களை போன்றவர்களுக்கு நிரந்தர பணி வழங்கவேண்டும்.
பி.எட் கல்வித் தகுதியில்லாத, ஏற்கனவே பணியாற்றி வரும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது. அரசின் இந்த உத்தரவைரத்து செய்யவேண்டும் என்று தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி ஜோதிமணி விசாரித்து இன்று தீர்ப்பளித்தார். தனது தீர்ப்பில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 6ஆண்டுகளாக பணியாற்றி வரும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தி அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு பிறப்பித்த உத்தரவுசெல்லாது, எனவே அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
கம்ப்யூட்டர் பட்டமேற்படிப்பு மற்றும் பி.எட் கல்வித் தகுதி உடையவர்கள்தான் இந்த நிரந்தரப் பணியில் நியமிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புஅலுவலகம் மூலமாகவும், மற்ற விதிமுறைகளை பின்பற்றியும்தான் இந்த 1880 பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications