நேபாள மன்னரை விரட்டிய போஸ்ட்மேன்

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு:நேபாள நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களில் இடம்பெற்றிருந்த மன்னரின் படம்அகற்றப்பட்டுள்ளது. அதற்குப் பதில் தபால்காரர் படம் இடம்பெற்றுள்ளது.

நேபாள நாட்டில் மக்கள் புரட்சியைத் தொடர்ந்து மன்னர் ஆட்சி அகற்றப்பட்டு, பல கட்சி கூட்டணி ஆட்சி வந்துள்ளது. பிரதமராக கிரிஜா பிரசாத்கொய்ராலா உள்ளார்.

மன்னரின் அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டது. நாட்டின் சாதாரண பிரஜையைப் போலவே இப்போது அவரும் கருதப்படுகிறார். இந்தநிலையில் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் இருந்த மன்னரின் உருவப்படத்தைஅகற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

அதன்படி தற்போது நேபாள் தேசிய வங்கி புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களை வெளியிட்டுள்ளது. அதில் மன்னரின் உருவத்திற்குப்பதில் தபால்காரர் ஒருவரின் படம் இடம் பெற்றுள்ளது.

தபால்களை ஏந்தியபடி உள்ள தபால்காரரின் உருவம் நாணயங்களில் இடம் பெற்றுள்ளது. நேபாளத்தில் தபால்தலைகள் அமலுக்கு வந்து 135ஆண்டுகள் ஆவதையொட்டி அதைச் சிறப்பிக்கும் வகையில் இந்த தபால்காரர் படம் இடம்பெற்றுள்ளதாக நேபாள் தேசிய வங்கி தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+