அதிமுக போராட்டம்-ஆதரவு கோரும் வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடக்கோரி அதிமுக சார்பில் நடைபெறுவுள்ள போராட்டத்திற்கு தமிழகமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி நதிநீர் உரிமையை தமிழகம் பெறுவதற்காக கடந்த 16 ஆண்டுகாளாக அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட்டு வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தான் முதல்வராக இருந்த போது தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பதற்காக சென்னையில் நான்கு நாட்கள் உண்ணாவிரதபோராட்டம் நடத்தினார்.

தமிழ்நாட்டின் உயிர் ஆதார பிரச்சனையான காவிரி நதிநீர் பிரச்சனையில், தமிழகத்தின் உரிமைகளை, காவரிப் படுகை விவசாயிகளின்உரிமைகளை பாதுகாப்பதற்காக, நடுவர் மன்றம் தந்த இறுதித் தீர்ப்பை, மத்திய அரசின் அரசிதழில் உடனே வெளியிட வேண்டும் என்றுவற்புறுத்தியும், எதிர்காலத்தில் காவிரி நதிநீர் உரிமையை தமிழகம் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்ககக் கோரிவற்புறுத்தியும், ஜெயலலிதா வரும் 18ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறார்.

வரும் 21ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக காவிரி நதிநீர் உரிமைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறது. இந்த போராட்டம்வெற்றி பெற மதிமுக வாழ்த்துவதோடு, தமிழக மக்களும், விவசாயிகளும் இந்த அறப் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+