பீரோ புல்லிங் கொள்ளையனும் நடிகைகளும்
சென்னை:சென்னையில் பிடிபட்ட பிரபல பீரோ புல்லிங் கொள்ளையன் சினிமா லைட் மேன் சங்க உறுப்பினர் என்று தெரியவந்துள்ளது. அவனுக்கு துணைநடிகைகளுடனும் தொடர்பு இருந்துள்ளது.
![]() |
இப்படி கொள்ளையடித்த பணத்தில் செஞ்சி ஈஸ்வரி நகரில் பல லட்சத்தில் பங்களா கட்டியுள்ளான். மேலும் 2 ஏக்கர் விவசாய நிலத்தையும்வாங்கியுள்ளான். இந்த சொத்து பத்திரங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
செஞ்சி வீட்டில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இப்போது நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகமணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனுதாக்கல் செய்ய உள்ளனர். மேலும் அவனது மனைவிகளான செல்வி, ஜீவா ஆகியோரையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
நாகமணியை சினிமா துணை நடிகை ஒருவர் லலட்மேன் யூனியனில் சேர்த்து விட்டுள்ளார். இதற்காக தான் கொள்ளையடித்த பணத்தில் இருந்து ரூ.45,000த்தை உறுப்பினர் கட்டமான நாகமணி லைட்மேன் சங்கத்துக்கு செலுத்தியுள்ளான். அதற்கான ரசீதையையும் அடையாள அட்டையையும்போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
நாகமணிக்கு துணை நடிகை தவிர்த்து இன்னொரு நடன நடிகையுடனும் தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.













Click it and Unblock the Notifications