மதிமுக போனதால் நஷ்டம் இல்லை: ப.சிதம்பரம்
சிவகங்கை:ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து மதிமுக விலகுவதால் எந்த பாதிப்பும் இல்லை, நஷ்டமும் இல்லை என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம்கூறியுள்ளார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டதாக வைகோ கூறியுள்ளார்.அவரது கட்சிக்கு 2 எம்.பிக்கள்தான் உள்ளனர். எனவே மதிமுகவின் விலகால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. மத்திய கூட்டணி அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படாது என்றார் சிதம்பரம்.
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் பகுதியில், சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து பெரும் போராட்டம் நடந்து வருவதால், சிறப்புபொருளாதார மண்டலங்கள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்க சிதம்பரம் மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications