விழுப்புரம் முதல் நாகை வரை மின் ரயில்-வேலு
வேலூர்விழுப்புரம் முதல் நாகர்கோவில் வரையிலான ரயில் பாதை இன்னும் 2 ஆண்டுளுக்குள் மின் மயமாகி விடும் என மத்திய ரயில்வே இணை அமைச்சர்வேலு தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விழுப்புரம்-திருச்சி, திருச்சி-மதுரை மார்க்கத்தில் உள்ள ரயில் பாதை இந்த ஆண்டுக்குள் மின்மயமாக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு மதுரை-தூத்துக்குடி, மணியாச்சி-நாகர்கோவில் மார்க்க ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு விடும்.
காட்பாடி-விழுப்புரம் மார்க்கத்தில் மின்மயமாக்கல் பணி வேகமாக நடந்து வருகிறது. இதேபோல, வேலூர்-திருவண்ணமாலை மார்க்கத்தில், அகலப்பாதை மாற்றப் பணிக்காக ரூ. 80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட்டில் 3 புதிய பிரிவுகளை உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டிவனம்-நகரி மார்க்கம் ரூ. 450 கோடிசெலவிலும், திருவண்ணாமலை-திண்டிவனம் மார்க்கம் ரூ. 177 கோடியிலும், வேளாங்கண்ணி-திருத்துறைப்பூண்டி பிரிவு ரூ. 92 கோடியிலும்உருவாக்கப்படும் என்றார் வேலு.












Click it and Unblock the Notifications