தமிழக சட்டசபை நாளை கூடுகிறது-23ம் தேதி பட்ஜெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. பரபரப்பான சூழ்நிலையில், சட்டசபை கூடுவதால், விறுவிறுப்பானகூட்டமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை காலை தொடங்குகிறது. முதலில், மறைந்த உறுப்பினர்கள் பழனிவேலன், சுந்தராம்பாள்,மலைக்கண்ணன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.

பின்னர் மறைந்த மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படும்.பிறகு சட்டசபை ஒத்திவைக்கப்படும்.

அதன் பின்னர் 23ம் தேதி சபை மீண்டும் கூடும். காலை 9.30 மணிக்கு சபை கூடியதும் நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என முடிவு செய்யப்படும். இந்தக்கூட்டத் தொடர் ஏப்ரல் இறுதி வரை நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது.

பரபரப்பான சூழல்:

காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகள் உச்சகட்டத்தில் உள்ளன. குறிப்பாக காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக அதிமுக கொதிப்புடன்உள்ளது. எனவே இந்தப் பிரச்சினையை அதிமுக பெரிதாக எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, பாமகவும் திமுக மீது உரசலுடன் உள்ளது. டாஸ்மாக் விவகாரம், சிறப்பு பொருளாதார மண்டலம், காவிரி உள்ளிட்ட பல விஷயங்களில்அது அரசுக்கு எதிரான கருத்துடன் உள்ளது. எனவே பட்ஜெட் கூட்டத் தொடரில் பாமக எம்.எல்.ஏக்களும் இதுவரை இல்லாத அளவுக்கு பிரச்சினைஎழுப்பக் கூடும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+