87வது முறையாக ஆட்டோ திருடன் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:பல்வேறு வழக்குகளில் 86 முறை கைது செய்யப்பட்ட திருடன் 87வது முறையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஆட்டோக்கள் அடிக்கடி திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் பறந்தன. இதையடுத்து ஆட்டோகொள்ளையனை பிடிக்க போலீசார் தனிப் படை அமைத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாக புதுப்பேட்டையை சேர்ந்த மொய்தீன் பிச்சை என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் விசாரணை நடத்தியதில்நுங்கம்பாக்கம் பகுதியில் ஆட்டோக்களை திருடியதை ஒப்புக் கொண்டான்.
அவனிடம் இருந்து 2 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கு முன்பு 86 முறை திருட்டு வழக்கில் கைதானவன் மொய்தீன். தற்போது87வது முறையாக கைதாகியுள்ளான்.
செஞ்சுரி அடித்தாலும் அடிப்பாரோ?












Click it and Unblock the Notifications