நீதிமன்றத்தை அவமதிக்கும் கேரளா: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக கேரள அரசு நியமித்த நிபுணர் குழு ஆய்வு நடத்தியிருப்பதுஉச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநி வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் நிலைமை குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.அதன் அடிப்படையில்தான், அணையின் உயரத்தை அதிகரிப்பதால் அணைப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனஉச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கேரள அரசு தன்னிச்சையாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து, அந்தக் குழு அணைப் பகுதியில் ஆய்வும் நடத்தியுள்ளது. இந்தக்குழுவின் தலைவர், அணையின் உயரத்தை அதிகரித்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளார். இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும்செயலாகும்.

மத்திய அரசுடனும் கலந்து ஆலோசிக்காமல், உச்சநீதிமன்றத்தையும் கேட்காமல், சம்பந்தப்பட்ட தமிழக அரசுடனும் கலந்து பேசாமல்,தன்னிச்சையாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டது கேரள அரசு.

முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்ட கேரள அரசு முயல்வது கண்டனத்துக்குரியது. கேரள அரசின் இந்த முயற்சிஉண்மையாக இருக்குமானால், தமிழகமும் இந்த நாட்டின் ஒரு பகுதி என்பதை மனதில் கொண்டு மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+