சிறுவனின் உயிரைப் பறித்த சினிமா சண்டை
சேலம்:ஆங்கில சினிமாவில் வரும் சண்டைக் காட்சியில் இடம் பெற்றதைப் போல தானும் செய்து பார்க்க விரும்பி தீக்குளித்த 13 வயது சிறுவன்பரிதாபமாக உயிரிழந்தான்.
சேலம், குகை ராமலிங்கசாமி தெருவைச் சேர்ந்தவர் தனபால். இவருக்கு 13 வயதில் கமலக்கண்ணன், 3 வயதில் வெற்றிவேலன் என இரு மகன்கள்.கமலக்கண்ணன் 8வது வகுப்பு படித்து வந்தான்.
சமீபத்தில் ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்துள்ளான். அதில் உடல் முழுவதும் தீப் பற்றிக் கொண்ட நிலையில், மோட்டார் சைக்கிளில் படத்தின் ஹீரோசாகசமம் செய்வது போன்ற காட்சி அவனைக் கவர்ந்துள்ளது.
நானும் இப்படிச் செய்ய வேண்டும் என அவனது தாயார் நிர்மலாவிடம் அடிக்கடிக் கூறி வந்துள்ளான். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல்வீட்டில் தனியாக இருந்த கமலக்கண்ணன், சினிமாவில் வரும் காட்சியை செய்து பார்க்க நினைத்து உடலில் தீவைத்துள்ளான்.
ஆனால் வெப்பம் தாங்க முடியாமல் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து தெருவில் விழுந்து புரண்டுள்ளான். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவனை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனான் கமலக்கண்ணன்.












Click it and Unblock the Notifications