சட்டப்பேரவையில் கலைஞர்: சட்டசபையில் உரை நிகழ்த்த கலாமை அழைக்க முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக சட்டசபையில் அழைப்பு நிகழ்த்த வருமாறு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி முதல் முறையாக 1957ம் ஆண்டு சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த சட்டசபைத்தேர்தல்களில், போட்டியிட்ட தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்தவர் கருணாநிதி.

அவரது 50 ஆண்டு கால சட்டசபை பணியைப் பாராட்டி சட்டப் பேரவையில் கலைஞர் என்ற பெயரில் பொன் விழா கொண்டாட முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் அன்பழகன் தலைைமையில் அனைத்துக் கட்சியினர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அப்போது, வருகிற மே 8, 9, 10 ஆகிய தேதிகளில் ஒன்றில் சட்டசபைக்கு வந்துஉரையாற்றுமாறு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அழைப்பு விடுப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர்பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி பர்தான் ஆகியோரை சென்னைக்கு அழைத்த வந்து தீவுத் திடலில் பிரமாண்டபாராட்டுக் கூட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+