விமானத்தைத் தகர்க்கப் போவதாக மிரட்டிய பயணி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:பாங்காக்கிலிருந்து டெல்லி சென்று கொண்டிருந்த விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக அதில் பயணம் செய்த மெக்சிகோ நாட்டுப்பயணி மிரட்டியதால் விமானம் அவசரம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.

பாங்காக்கிலிருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த மெக்சிகோ நாட்டுப் பயணிஒருவர், குடிபோதையில் சக பயணிகள், விமான ஊழியர்களிடம் வரம்பு மீறி நடக்க ஆரம்பித்தார். ஒரு பயணியையும் அவர் அடித்து விட்டார்.

இதையடுத்து அவரை விமான ஊழியர்களும், சக பயணிகளும் சேர்ந்து மடக்கிப் பிடித்தனர். அப்போது அந்த நபர், என்னை ஏதாவது செய்தால்நான் குண்டு வைத்துள்ளேன், விமானத்தைத் தகர்த்து விடுவேன் என்று அந்த நபர் மிரட்டினார்.

இதனால் விமானத்தில் பீதி எழுந்தது. உடனடியாக விமானத்தை அருகில் உள்ள கொல்கத்தா விமான நிலையத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டது.கொல்கத்தா விமான நிலையத்துக்குத் தகவல் தரப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

இதைத் தொடர்ந்து விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கியது. அதையடுத்து கமாண்டோ அதிரடிப்படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும்விமானத்திற்குள் ஏறினர். குண்டுவைத்து விடுவதாக மிரட்டிய பயணியிடமும் அவரது உடமைகளிலும் சோதனை போடப்பட்டது.

மேலும் விமானத்தையும் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போய் நிறுத்தி விமானம் முழுவதும் சோதனை போடப்பட்டது. ஆனால் குண்டுஎதுவும் சிக்கவில்லை.

குண்டு வைத்து விடுவேன் என்று கூறி கலவரத்தை ஏற்படுத்திய பயணியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+