வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:3 நாள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்திருந்த வங்கி ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

ஊதிய உயர்வு, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வங்கி ஊழியர்கள் இந்தியா முழுவதும்28ம் தேதி முதல் 30ம் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்திருந்தனர்.

இதன் காரணமாக 3 நாட்களும், ஏப்ரல் 1, 2 ஆகிய நாட்களில் வங்கி விடுமுறை என்பதாலும் மொத்தம் 5 நாட்களுக்கு வங்கிப் பக்கம் பொதுமக்கள்வர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று இந்திய வங்கிகள் சங்கத்துடன் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுக்குறித்துஅகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் கூறுகையில், 28ம் தேதி முதல் நடந்த இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை திரும்ப பெறுகிறோம்.

காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொண்டு இருக்கிறது. மற்ற கோரிக்கைகள்பற்றி இந்திய வங்கிகள் சங்கத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்படும் என்றார்.

இதுதொடர்பாக ஏஐடியூசி தொழிற்சங்க பொதுச்செயலாளர் குருதாஸ் குப்தா தலைமையில் வங்கி ஊழியர் சங்க ஐக்கிய சம்மேளன பிரதிநிதிகள்மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை நேற்று சந்தித்து பேசினர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது வங்கிப்பணிகளுக்கு புதிதாக ஊழியர்களை நியமிக்கப்பதற்கான தடை நீக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில்உறுதியளிக்கப்பட்டது. வங்கிப்பணிகளை வெளியாட்களுக்கு ஒப்பந்த முறையில் விடுவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+