ராஜீவை மறந்த ராகுல் காந்தி: சு. சுவாமி
டெல்லி:ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது குறித்து ராகுல் காந்தி பேச மறந்தது ஏன் என்று கேட்டுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர்சுப்ரமணியம் சுவாமி.
நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால், அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க விட்டிருக்க மாட்டார்கள் என்றுராகுல்காந்தி, உ.பி. தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் சுவாமி ஒரு அறிக்கை விட்டுள்ளார்.
அதில், ராஜீவ் காந்தி படுகொலையில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர வேண்டும் என்றுராகுல் காந்தியோ அல்லது அவரது தாயார் சோனியா காந்தியோ இதுவரை ஒருமுறை கூட நாடாளுமன்றத்தில் பேசாதது ஏன்?
பிரபாகரனுக்கு எதிராக இன்டர்போல் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. அது இன்னும் நிலுவையில் உள்ளது. ஆனால் இதுவரை அதுகுறித்துசோனியாவோ, ராகுலோ பேசாதது ஏன்?
ஆனால், விடுதலைப் புலிகளை பகிரங்கமாக ஆதரித்த, பாராட்டிய கட்சியோடும், அமைப்புகளோடும் காங்கிரஸ் கட்சி தேர்தல் கூட்டணிஅமைத்தது.
இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தி, நேரு, காந்தி குடும்பத்தின் பெருமைகளை பிரஸ்தாபிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்சுவாமி.












Click it and Unblock the Notifications