சிங்கப்பூர்: 2 தமிழர்களுக்கு கசையடி- சிறை!!
சிங்கப்பூர்:சைக்கிளை யார் ஓட்டுவது என்ற பிரச்சினையில் ஒருவரைக் கொலை செய்த 2 இந்திய தமிழர்களுக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனையும், கசையடியும் தரப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் சந்திரகன் கிருஷ்ணமூர்த்தி (31), பிரபாகரன் செல்வராஜ் (33), வடிவேலு பிச்சை கவுண்டர் (35). கடந்த ஆண்டு மே 23ம் தேதிஇவர்களுக்கும், ராமலிங்கம் மாணிக்கம் (44) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஒரு இடத்திற்குச் செல்லவிருந்த அவர்களில் யார் சைக்கிளை ஓட்டிச் செல்வது என்பதில் ஏற்பட்ட தகராறு அது. இதில், அவர்களுக்குள் பெரிய அடிதடி ஏற்பட்டுமாணிக்கத்தை மற்ற 3 பேரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்து விட்டனர்.
இவர்களில் வடிவேலு பிச்சை கவுண்டர், பீர் பாட்டிலை உடைத்து அதை வைத்து மாணிக்கத்தின் கழுத்தை கரகரவென அறுத்துள்ளார். இந்த சம்பவத்தில் மாணிக்கத்தின்நண்பர் முருகபாண்டியன் வேலு காயமடைந்தார்.
இதையடுத்து போலீஸார் கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ் ஆகியோரை கைது செய்தனர். பிச்சை கவுண்டர் தப்பி விட்டார், தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம் கிருஷ்ணமூர்த்திக்கு 10 ஆண்டு சிறையும், செல்வராஜுக்கு 9 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது. மேலும் இரண்டுபேருக்கும் தலா 3 கசையடியும் தர நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications