உல்மரைக் கொன்றது பாக். ரசிகர்களா?
கிங்ஸ்டன்:பாகிஸ்தான் அணி, அயர்லாந்து அணியிடம் தோற்றதால் ஆத்திரமடைந்த 3 பாகிஸ்தான் ரசிகர்கள்தான் பாப் உல்மரைக் கொன்றிருக்க வேண்டும் என புது தகவல் கிளம்பியுள்ளது.
உல்மர் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை ஜமைக்கா போலீஸார் தெளிவான தகவலைத் தராமல் உள்ளனர். ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்பட்டது.
![]() |
ஆனால் 2 முறை நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் பாகிஸ்தான் வீரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்று ஜமைக்கா போலீஸார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சூதாட்டக்காரர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. குறிப்பாக மும்பையைச் சேர்ந்த சூதாட்டக்காரர் ஒருவர்தான் உல்மரைக் கொன்றதாக புதுத் தகவல் எழுந்தது. உல்மர் இறப்பதற்கு முதல் நாள் இரவு அந்த சூதாட்டக்காரர் உல்மர் அறைக்கு வந்தாராம்.
அவரைப் பார்த்ததும், உல்மர் கோபமடைந்து வெளியேறும்படி சொல்லியுள்ளார். இதையடுத்து அந்த நபர் வெளியேறி விட்டாராம். இந்த சம்பவத்தை உல்மரே தங்களிடம் கூறியதாக பாகிஸ்தான் வீரர்கள், போலீஸ் விசாரணையில் கூறியுள்ளனராம்.
இதனால் அந்த சூதாட்டக்காரர் மீதும் போலீஸ் பார்வை திரும்பியுள்ளது. இதற்கிடையே, 3 பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என தற்போது இன்னொரு பரபரப்பு தகவல் எழுந்துள்ளது.
![]() |
இர்பான் செளத்ரி, ஹூண்டே கான், ஹமீத் மாலிக் என்ற அந்த ரசிகர்கள், தீவிர பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள். பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளுக்குத் தவறாமல் வருபவர்கள்.பாகிஸ்தான் வீரர்கள் பலருக்கும், இவர்களை நன்கு தெரியும்.
அயர்லாந்து போட்டிக்கு முன்பு கூட 3 பேரும், பாகிஸ்தான் வீரர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அயர்லாந்து போட்டி முடிந்த அடுத்த நாளே இவர்கள் அவசரம் அவசரமாக பாகிஸ்தான் திரும்பி விட்டனர். எனவே அயர்லாந்துப் போட்டியில் பாகிஸ்தான் தோற்றதால் ஆத்திரமடைந்து அவர்கள் உல்மரைக் கொன்றிருக்கலாம் என்று புதுச் சந்தேகம் கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், உல்மர் கொலை விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த உருப்படியான விவரமும் கிடைக்கவில்லை. இந்த விசாரணை அவ்வளவு சீக்கிரம் முடியாது. நீண்ட காலம் பிடிக்கும். இதுவரை யார் மீதும் திட்டவட்டமான சந்தேகம் எழவில்லை. குற்றவாளிக்கு மிக அருகில் நாங்கள் இருப்பதாக கூற முடியாது என்று விசாரணை அதிகாரியான ஜைமக்கா துணை காவல் ஆணையர் மார்க் ஷீல்ட்ஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையே, பாகிஸ்தானுடன் நடந்த போட்டியில் எங்களது திறமையால்தான் ஜெயித்தோம். போட்டியில் சூதாட்டம் இடம்பெறவில்லை என்று அயர்லாந்து கேப்டன் டிரன்ட் ஜான்ஸ்டன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய இந்தப் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சூதாட்டத் தடுப்பு அதிகாரிகள் பார்வையிட்டு சூதாட்டம் நடைபெற்றதா என்பைத ஆய்வு செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!














Click it and Unblock the Notifications