புலிகளின் 3 படகுகள் மூழ்கடிப்பு - 18 பேர் பலி
கொழும்புவிடுதலைப் புலிகளின் 3 படகுகைள மூழ்கடித்து விட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தி்ல 15 முதல் 18 விடுதலைப் புலிகள் வரை பலியாகி விட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை இலங்கை பாதுகாப்புப் படைகள் தீவிரப்படுத்தியுள்ளன.
வட கிழக்கில் உள்ள முல்லைத்தீவில் கடலோர கண்காணிப்பில் இலங்கை கடற்படை ஈடுபட்டிருந்தது. அப்போது விடுதலைப் புலிகள் படகுகளில் வருவது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை நிறுத்துமாறு கடற்படை உத்தரவிட்டது.
இருப்பினும் படகுகள் நிற்காமல் சென்றால், அந்தப் படகுகளை குண்டு வீசி கடற்படை தகர்த்தது. மொத்தம் 3 படகுகள் கடலில் மூழ்கின. இதில் படகுகளில் இருந்த 15 முதல் 18 விடுதலைப் புலிகள் வரை பலியாகியிருக்கலாம் என கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் 7 படகுகள் அங்கிருந்து தப்பி விட்டன.