ஆகஸ்ட் வரை டைம் கேட்கும் பிரேமலதா விஜயகாந்த்
ென்னை:தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான சென்னை ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தை அரசிடம் ஒப்படைக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் கேட்டு விஜயகாந்த்தின் மனைவியும், நிலத்தின் உரிமையாளருமான பிரேமலதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கோயம்பேடு பகுதியில் அடுக்கு மேம்பாலம் கட்ட மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டது. இதற்காக, விஜயகாந்த்தின் கல்யாண மண்டபம் உள்ளிட்ட சில கட்டடங்களைக் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சென்னைன உயர்நீதிமன்றத்தில் பிரேமலதா மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், 4 வாரங்களுக்குள் நிலத்தை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பிரேமலதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை கல்யாண நிகழ்ச்சிகள் புக் ஆகியுள்ளதால் அதுவரை மண்டபத்தை ஒப்படைக்க அவகாசம் தரவும், மண்டபத்தை இடிக்கத் தடை கோரியும் கோரப்பட்டிருந்தது.
மண்டபத்தை இடிக்க தடை விதிக்க மறுத்து விட்ட உச்சநீதிமன்றம், கால அவகாசம் கேட்டு உயர்நீதிமன்றத் அணுகுமாறு அறிவுறுத்தியது.
அதன்படி இன்று பிரேமலதா சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கல்யாண நிகழ்ச்சிகள் பதிவாகியுள்ளதால் ஆகஸ்ட் 31ம் தேதி வரை மண்டபத்தை ஒப்படைக்க அவகாசம் தர வேண்டும் என பிரேமலதா கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி












Click it and Unblock the Notifications