5 மீனவர் குடும்பங்களுக்கு கருணாநிதி நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது வெறித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் நான்கு மீனவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஜேசுதாஸ் என்ற மீனவர் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, பலியான ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications