ராமநாதபுரம்: 1 லட்சம் மீனவர்கள் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:இலங்கை கடற்படையினரின் வெறித் தாக்குதல் மற்றும் 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதித்தது ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 1 லட்சம் பேர் நேற்று வேலைநிறுத்தத்தில் குதித்தனர். இதனால் மீன் பிடி தொழில் ஸ்தம்பித்தது.
ராமேஸ்வரம், திருவாடானை, தொண்டி, தங்கச்சி மடம், தனுஷ்கோடி, தேவிப்பட்டனம், பனைக்குளம் உள்ளிட்ட அனைத்து மீன் பிடி பகுதிகளிலும் உள்ள மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கப் போகவில்லை.
கிட்டத்தட்ட 1 லட்சம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் மீன்பிடி தொழில் முற்றிலும் முடங்கிப் போனது. விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் அனைத்தும் கடலுக்குச் செல்லாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications