சேலம் கோட்டம்: கேரளாவைக் கேட்கத் தேவையில்லை-வேலு
சென்னை:சேலம் ரயில் கோட்டம் அமைப்பது தொடர்பாக கேரள அரசுடன் தமிழக அரசு பேசத் தேவையில்லை, அவர்களிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு கூறியுள்ளார்.
சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் வேலு பேசுகையில், சேலம் ரயில்வே கோட்டம் அமைப்பது தொடர்பாக கேரள அரசிடம் தமிழக அரசு பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.
இரு மாநில அரசுகளும் இதுதொடர்பாக விவாதிக்கலாம் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருப்பது ஒரு ஆலோசனைதான்.
பாலக்காடு கோட்டத்தைப் பிரிப்பதால், கேரளாவுக்கு எந்த பாதிப்பும் வராது. முழுக்க முழுக்க தமிழக பகுதிகளைத் தனியாக பிரித்துத்தான் சேலம் கோட்டம் அமைக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டு விட்டது. தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் வேகமாக நடந்து வருகின்றன என்றார் வேலு.












Click it and Unblock the Notifications