பெரியாறு: கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:முல்லை பெரியார் அணை பிரச்சனை குறித்து விளக்கம் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிள்ளது.

பெரியார் அணையின் நீர்மாட்டத்தை 135 அடியில் இருந்து 142 அடியாக உயர்ந்த கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் 142 அடி வரை நீரை தேக்கலாம் என உத்தரவிட்டது. ஆனால் இதை கேரள அரசு ஏற்க மறுத்து விட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துமாறு கேரளா அரசுக்கு உத்தரவிடக் கோரியும், பெரியாறு அணை குறித்து கேரள அரசு கடந்த ஆண்டு இந்திய திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும் ஆர்.கே ராமச்சந்திரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் பெரியாறு வைகை ஒரு போகசாகுபடி விவசாயிகள் தங்கள் சார்பில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.கே.தாக்கா, அல்தமஸ்கபீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது கேரளா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்துள்ள மூல வழக்கு நிலுவையில் இருக்கும் போது புதிதாக இந்த 2 மனுக்களுக்கு அவசியமில்லை என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு, தமிழக, கேரளா அரசுகள் ஆகியவற்றுக்கும், மத்திய நீர்வள ஆணைய தலைவர், பெரியாறு அணை மதுரை கோட்ட கண்காணிப்பு பொறியாளர், கம்பம் நிர்வாக பொறியாளர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+