விலைவாசி உயர்வு: வைகோ போராட்டம்
சென்னைவிலைவாசி உயர்வைக் கண்டித்து, அதைக் கட்டுப்படுத்த்த தவறி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு வைேகா தலைமை தாங்கினார். பெரும் திரளான மதிமுகவினர் கூடியதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் வைகோ பேசுகையில், திமுக அரசு பதவிக்கு வந்த நாள் முதலாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மிக்க கடுமையாக உயர்ந்து விட்டன. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதால், மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலைவாசியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது. விலைவாசியைக் குைறக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த மாநில திமுக அரசு தவறி விட்டது என்றார் வைகோ.
இதேபோல கோவை, வேலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்ேவறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.